ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 13. அனுமார் சீதையைத் தேற்றினது

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 13. அனுமார் சீதையைத் தேற்றினது

ஸ்ரீ ராமஜயம்! ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் : வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் : அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

13. அனுமார் சீதையைத் தேற்றினது

ராகம் : ஸாவேரி

பல்லவி

வருவாரே ஸ்ரீராமர் வந்தும்மை
காப்பாரே கவலை வேண்டாம் அம்மா (வ)

அனுப்பல்லவி

ஆயிரம் அரக்கர்கள் அடிக்க வந்தாலும்
அந்த பத்து தலை ராவணன் பிடிக்க வந்தாலும் (வ)

சரணம்

வானர சேனை வானினும் பெரிது
சாணுயரம் இருந்தாலும் சக்தியில் பெரிது
தானெனும் அகந்தை குலத்தினை அழிப்பது
மானினால் மூண்ட மிகப்பெரும் போரிது
(வ)

ஸம்ஸார கடலிது தாண்டவோ அரியது
சேதுவாய் காத்திடும் ஸ்ரீராமர் பெயரது
மாது நீ மனதினில் கவலையை போக்கிடு
சாதுவென்றெண்ணாதே சரித்திரமாவது (வ)

Комментарии

Информация по комментариям в разработке