ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 7. சீதையைக் கண்டது

Описание к видео ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள் - 7. சீதையைக் கண்டது

ஸ்ரீ ராமஜயம்!
ஸுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

எழுத்து & இயக்கம் :
வேதாந்த கவியோகி நாகஸுந்தரம்- புதுடில்லி

இசையமைப்பு & பாடல் :
அபர்ணா கிருஷ்ணன்- மும்பை

தைரியம், நல்லபுத்தி, வாக்குவன்மை அனைத்தும் அருளுபவர் ஸ்ரீமாருதி என்கிற ஆஞ்சநேயஸ்வாமி. அவரின் வீரச்செயல், சீதையைக்கண்டது, தூதுபோனது, இலங்காதகனம் ஆகிய இராமாயண காவியத்தின் சிறப்பு மிக்க பகுதியே ஸுந்தர காண்டம் ஆகும். இராமாயணம் முழுவதுமே இசை நாடகமாக இராமநாடக கீர்த்தனைகளாக ஆக்கியவர் ஸ்ரீஅருணாசல கவிராயர். இப்பால் நாகஸுந்தரத்தால் சில பாடல்கள் எழுதப்பட்டு அவை ஸ்ரீமதி அபர்ணா கிருஷ்ணனால் இசைப்பாடல்களாக பாடப்பட்டு இங்கே வெளிவருகிறது.

7. சீதையைக் கண்டது

ராகம் : கதனகுதூகலம்

பல்லவி

இவள்தானே சீதாபிராட்டி உடல் மெலிந்து
உள்ளம் சோர்ந்த (இ)

அனுபல்லவி

அன்றொரு நாள் அரக்க இராவணன்
தந்திரமாக சிறையெடுத்துச் சென்ற (இ)

சரணம்

துணையினைப் பிரிந்ததற்கு
துக்கம் ஏனோ இவ்வளவு
துறவு மனம் இல்லையே என்று
இராமனைப் பரிஹசித்தேனே ராம ராமா (இ)

கிழிந்த ஆடை கலைந்த கேசம்
பழிக்கும் அரக்கிகள் பக்கமிருக்க
விழியில் வேகம் உள்ளத்தில் சோகம்
அழியும் இந்த லங்கா நகரம் (இ)

#aitechnology

Комментарии

Информация по комментариям в разработке