DEVA song | வரம் ஒன்று தர வேண்டும் அம்மா ...| VARAM ONDRU THARA VENDUM AMMA

Описание к видео DEVA song | வரம் ஒன்று தர வேண்டும் அம்மா ...| VARAM ONDRU THARA VENDUM AMMA

Credits
Music: #Deva (Thenisai Thendral Deva) for Adhiswara
Lyrics: #Kadhalmathi
Video Editing: Sakthi Uma
Thumbnail: Sakthi Harsha
#thenisaithendraldeva #amma #omsakthi #guru #melmaruvathur

பல்லவி:
வரம் ஒன்று தர வேண்டும் அம்மா
உன்னை மறவாத வரம் வேண்டும் அம்மா

நினைக்காத நாளில்லை அம்மா
உன் நினைவின்றி நான் இல்லை அம்மா

சக்தி நீதானம்மா, சற்று கண் பாரம்மா
இன்னும் பிடிவாதமா ஏன் அம்மா

சுற்றம் நீதானம்மா சுற்றி வருவேன் அம்மா
பெற்ற மகன் பாரம்மா கூறம்மா

(வரம் ஒன்று...)

சரணம் 1
அம்மா என் அம்மா உன் ஆலயத்தில் என்றும் வேப்ப மரமாக நான் இருக்க வேண்டும்
அம்மா என் அம்மா உன் அடியார்க்கு நானும் அருட் கஞ்சி அமுதாகி பசியாற்ற வேண்டும்

அம்மா உன் திருமேனி அணிகின்ற செவ்வாடை ...
அம்மா உன் திருமேனி அணிகின்ற செவ்வாடை
அதில் இணையும் நூலாக வேண்டும்
அம்மா உன் திருநெற்றி இடுகின்ற செந்தூரம்
அதில் ஒற்றி நான் வாழ வேண்டும்

அதை ஊர் பார்க்க வேண்டும் என் உயிர் கிடக்க வேண்டும்
ஒரு வரம் அளிக்க வேண்டும் உன் வரம் பலிக்க வேண்டும்
என் வாழ்வினிக்க நீயும் வாக்குரைக்க வேண்டும் அம்மா ..அம்மா... அம்மா

சரணம் 2
அம்மா என் அம்மா உன் கருவறையில் பெண்கள்
விளக்கேற்றும் திரியாக நான் மாற வேண்டும்
அம்மா என் அம்மா உன் திருவடியில் என்னை
அர்ச்சனை பூவாய் தினம் வைக்க வேண்டும்

அம்மா உன் ஆன்மீக மன்றங்கள் பல கோடி...அம்மா உன் ஆன்மீக மன்றங்கள் பல கோடி
அதில் ஏற்றும் ஓம் சக்தி கொடியாக வேண்டும்
அம்மா உன் தார்மீக உணர்வோடு உறவாடி நான் ஏற்கும் இருமுடி பணி சேர்க்க வேண்டும்

வரம் கொடுக்க வேண்டும் ...நல்வழி பிறக்க வேண்டும்
உன் கரம் கொடுக்க வேண்டும் என் கலி தீர்க்க வேண்டும்
எப்பிறவியிலும் நீ எந்தன் தாயாக வேண்டும் .. அம்மா.. அம்மா.. அம்மா

சரணம் 3
அம்மா என் அம்மா உன் கோவிலிலே கேட்கும் மணியோசையாக நான் மாற வேண்டும்
அம்மா என் அம்மா உன் மந்திரத்தில் கேட்கும் தமிழோசையாவும் நான் ஆக வேண்டும்
அம்மா உன் அருள் வேள்வி யாகத்தை வளர்க்கின்ற ...
அம்மா உன் அருள் வேள்வி யாகத்தை வளர்க்கின்ற விறகாக நான் இருக்க வேண்டும்
அம்மா உன் அருட்சித்தர் பெரும் பூமி கிடக்கின்ற மண்ணாக நான் பிறக்க வேண்டும்
இதை நீ ஏற்க வேண்டும் ...என் குரல் கேட்க வேண்டும் ..அருள் மழை பொழிய வேண்டும்
என் மனம் விளைய வேண்டும்
உன் பாச மகன் மீது பார்வை பட வேண்டும் அம்மா... மருவூர் அம்மா...

Комментарии

Информация по комментариям в разработке