திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 37 I KSS ICF

Описание к видео திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 37 I KSS ICF

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை நாள் -14/08/2024
திருப்பழனம்
பாடல் எண் : 1

ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாளைக்
கூடினா ரொருவர் போலுங் குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந் தூயநன் மறைக ணான்கும்
பாடினா ரொருவர் போலும் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 2

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 3

கண்டராய் முண்ட ராகிக் கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித் தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைக டீர்ப்பார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 4

நீரவன் றீயி னோடு நிழலவ னெழில தாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரம யோகி
ஆரவ னண்ட மிக்க திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமிழ்த மானார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 5

ஊழியா ரூழி தோறு முலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும் பராபரர் பரம தாய
ஆழியா னன்னத் தானு மன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 6

ஆலின்கீ ழறங்க ளெல்லா மன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 7

ஆதித்த னங்கி சோம னயனொடு மால்பு த ( ன் ) னும்
போதித்து நின்று லகிற் போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழுல குஞ் சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 8

காற்றனாற் காலற் காய்ந்து காருரி போர்த்த வீசர்
தோற்றனார் கடலு ணஞ்சைத் தோடுடைக் காதர் சோதி
ஏற்றினா ரிளவெண் டிங்க ளிரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 9

கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த வெரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்க டூவி வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.

பாடல் எண் : 10

குடையுடை யரக்கன் சென்று குளிர்கயி லாயவெற் பின்
இடைமட வரலை யஞ்ச வெடுத்தலு மிறைவ னோக்கி
விடையுடை விகிர்தன் றானும் விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை யடிகள் போலும் பழனத்தெம் பரம னாரே.

Комментарии

Информация по комментариям в разработке