மெய் வழி சாலை ஆண்டவர்கள் செயலுடைச் சமரசம் | Meivazhi salai Andavargal

Описание к видео மெய் வழி சாலை ஆண்டவர்கள் செயலுடைச் சமரசம் | Meivazhi salai Andavargal

🔴🌙 ஆதியே துணை

மெய் வழி சாலையில் செயலுடைச் சமரசம்

வழிகாட்டிய வள்ளலார்👇

வடலூர் வள்ளற் பிரானுக்கு பூரண ஞான செல்வத்தைத் தந்து, அவரை உயர் ஞானியாக்கியவர், ஆண்டவர்களின் குருக்கொண்டலரான இந்த தனிகைமணி ஞான செம்மலே ஆவார்கள். இவர்களே தான், வள்ளலார் மறைவுக்கு (1874) பிறகு 27 ஆண்டு காலம் காத்திருந்து ஆண்டவர்களைக் கண்டெடுத்து ஞான பிரகாசத்தை அருளி பிரம்ம சொரூபியாக மாறச் செய்தார்கள். தொடர்ந்து ஆண்டவர்களுக்கு ஓர் அருந்தவ கட்டளையிட்டு, திருக்கயிலாய நாட்டு வேத விதிப்படி தன்னிகரற்ற மேருகிரி தவத்தில் ஆண்டவர்களை அமரச் செய்தார்கள். ஆண்டவர்களும் நெடுநாள் அன்ன ஆகாரமின்றி நிர்விகார ரகிதநிலையாசன தவக்கோலத்தில், கடுந்தியான முகத்திலிருந்து, கைவல்யபதம் அடையப் பெற்று, நித்திய ஜீவ மகா முனிவராகினார்கள். தனிகைமணி வள்ளல் அவர்களும், தேவமகா சபையில் தாம் முன்னரே வாக்கு தந்தபடி நீதித்தீர்ப்பு நடத்தும் பெரும்பார அருங்காரண செயலை ஆண்டவர்களிடம் ஒப்பிவித்து, மனுக் கோடிகளுக்கு கதிமோட்சம் தரும் பாசுபத கங்கண முத்திரையையும் அவர்களுக்குப் பதிப்பிக்கச் செய்தார்கள். மேலும், சர்வக்ஞ தன்மை கொண்ட இந்த ஞான செல்வத்தை, உலகம் முழுவதும் உய்யும்படி செய்து அனைவரையும் ஆட்கொள்ளும்படி ஆண்டவர்களுக்கு ஆணையிட்டு ஆசீர்பதித்தார்கள்.

டெலிகிராம் குழுவில் இணைய
👉 https://t.me/Aadhiye_thunai

👉 https://t.me/Vazhikattia_Vallalar_1823

#மெய்வழிசாலை #அருட்பெருஞ்ஜோதி #ஜீவகாருண்யம் #arutperunjothi #vallalar #வள்ளலார்

Комментарии

Информация по комментариям в разработке