செய்யும் செயலில் வெற்றி - சக்தி தேவி காரிய சித்தி மந்திரம் | அகத்தியர் அருளியது

Описание к видео செய்யும் செயலில் வெற்றி - சக்தி தேவி காரிய சித்தி மந்திரம் | அகத்தியர் அருளியது

Sakthi Manthiram - Agathiyar Sakthi Manthiram - Agathiyar Manthiram

இந்த மந்திரம் அகத்திய பெருமான் இயற்றிய பரிபாஷை 300 என்னும் நூலில் உள்ளது. நாம் ஏற்கனவே அந்த நூலில் இருந்து செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் மற்றும் சிவ மந்திரங்களும் பற்றி பதிவுகளை வெளியிட்டுஇருந்தோம். இன்று நாம் சக்தி மந்திரம் பற்றியும், அந்த மந்திரத்தை சொல்ல குரு உபதேசம் வேண்டுமா என்பதை பற்றியும் பாக்கபோறோம், எனவே இந்த பதிவை முழுசா பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்

சக்தி மந்திரம் :

பாரப்பா சிவபூசை செய்துகொண்டு
பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று
அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவாவென்று
நேரப்பா சிவரூபி வாவாவென்று
நேர்மையுடனோர் மனதாய் நூற்றெட்டானால்
காரப்பா சத்திசிவம் ரெண்டும்வைத்துக்
கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே. (86)

அகத்தியர் சக்தி மந்திரம் :

"ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா"

Agathiyar Sakthi Manthiram

"OM SREE SIREENG SIVAYAVASI VAVA SIVAROOBI VAVA"

சக்தி மந்திரம் பொருள்:

முதலில் சிவமந்திரத்தை பற்றி சொன்னேன்,அதற்கு அடுத்தபடியாக இப்போது அன்னை சத்தியின் மந்திரத்தை பற்றி சொல்கிறேன் கேள்,

உடல் மற்றும் மன சுத்தியுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா" என்று மனதை ஓர் நிலைபடுத்தி நூற்றி எட்டு உரு செபித்து விட்டு எக்காரியம் செய்தாலும் அது சித்தியாகும்.

எந்த காரியம் செய்யும் முன்னும் சக்தி மற்றும் சிவ மந்திரங்களை 108 முறை செபித்து விட்டு சக்தி, சிவனுக்கு பூசை செய்து மனதார வேண்டி விட்டு பின்னர் அந்த செயலை செய்தால் அதில் எந்த ஒரு தடையுமின்றி சித்தியாகும் என்கிறார் அகத்திய பெருமான்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (89)

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்க நாங்க வாழ்த்தி வாங்குகின்றோம்

#aalayamselveer #sakthimanthiram

Комментарии

Информация по комментариям в разработке